
கொழும்பு: அடுத்த இரண்டு மாதங்கள் இலங்கை மக்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கும் என நாட்டின் புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கையின் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுள்ளார். இந்நிலையில், இலங்கையின் உண்மை நிலை குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளித்துள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க, “இலங்கை மக்களுக்கு அடுத்த இரண்டு மாதங்கள் மிகவும் கடினமாக இருக்கும். இதைப் பற்றி பொதுமக்களிடம் பொய் சொல்லும் எண்ணம் எனக்கு இல்லை. மோசமான மன அழுத்தங்களை எரிப்பதன் உண்மையான அர்த்தம் இதுதான்.
தற்போது ஒரு நாளுக்கு தேவையான பெட்ரோல் மட்டுமே உள்ளது. இருப்பினும், இந்திய கடன் உதவியின் கீழ், 2 டீசல் கப்பல்கள் மே 19 மற்றும் ஜூன் 1 மற்றும் 2 பெட்ரோல் கப்பல்கள் மே 18 மற்றும் மே 29 ஆகிய தேதிகளில் வரும். நுகர்வோருக்கு எரிவாயு சிலிண்டர்களை வழங்க எங்களுக்கு அவசரமாக $ 20 மில்லியன் தேவைப்படுகிறது.
நாம் எதிர்கொள்ளும் பொருளாதார நிலையை சரி செய்ய சுமார் 75 மில்லியன் டாலர்கள் தேவை. மின்வெட்டை உடனடியாக தீர்க்க முடியாததால், தினமும் 15 மணி நேரம் மின்வெட்டு ஏற்படும். மருந்து மற்றும் அறுவை சிகிச்சை கருவிகள் பற்றாக்குறையை போக்க, தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம்.
வரவிருக்கும் மாதங்களில் நாம் சவால்களையும் கஷ்டங்களையும் எதிர்கொள்கிறோம். இருப்பினும், இந்த நிலை நீண்ட காலத்திற்கு இருக்காது. வரும் மாதங்களில் நட்பு நாடுகள் நமக்கு உதவும். இந்த விடயத்தில் அவர்கள் ஏற்கனவே இலங்கைக்கு தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.
கடந்த வியாழன் அன்று நான் ஒரு அரசியல் தலைவராக மட்டுமன்றி கொழும்புப் பல்கலைக்கழகத்தில் இலவசக் கல்வியின் மூலம் பயனடைந்த தேசியத் தலைவராகவும் பிரதமராகப் பதவியேற்றேன். நாட்டுக்கு என் கடமையை நிச்சயம் நிறைவேற்றுவேன். அதுதான் உங்களுக்கு நான் கொடுத்த வாக்குறுதி. “